63 நாயன்மார்கள்

18. கலிக்கம்ப நாயனார்
விருதாசலம் அருகில் உள்ள பெண்ணாடகத்தில் வணிகர் குலத்தில் கலிக்கம்பர் பிறந்தார். இறைவனுடைய திருஅடியை மறவாதவர். தூங்கானைமடம் என்ற அவ்வூர் திருக்கோவிலில் தொண்டுகள் பல புரிந்தார். சிவன் அடியார்களுக்கு தொண்டு புரிவதில் ஆர்வம் உள்ளவர்.

ஒருநாள் தமது மாளிகையில் அமுது செய்யவந்த அடியார்களை அழைத்து துனைவியார் நீர்விட பாதபூசை செய்வார். கலிக்காமரிடத்தில் வேலைசெய்த அடியாள் ஒருவர் வேலையைவிட்டு விலகி சிவனடியாராகி திருநீறும் கண்டிகையும் அணிந்து அக்கூட்டத்தில் இருந்தார். அடியவர்களின் முன்னைய நிலையை நோக்காமல் அன்புடன் அவர் திருவடிகளை தொட்டு பூசை பண்ணினார். நாயனாரின் துனைவியார் அந்த புதிய அடியவரின் முகத்தைப் பார்த்து நம்வீட்டில் பணி புரிந்தவன் தானே என்று நீர் வார்க்காமல் நிறுத்தினார்.

சிவனடியார் நிலை குறித்து ஆய்வதற்கு நாம் யார். அவர் முந்தைய நிலை எதுவாயினும் இப்போது அவர் சிவனடியார். அவரை இழிவு செய்வது பெரும் பிழை. அவர் திருவடிக்கு நீர்வார்க்க மறுத்த மனைவி மீது சினம் கொண்டு தன் வாளினால் அவள் கரத்தை வெட்டினார். குடத்தை வாங்கி தானே நீர் வார்த்து பூசித்தார். பெருமான் தோன்றி மனைவியின் கை மீண்டும் பெற அருள் புரிந்தார். கலிக்கம்பர் பல ஆண்டுகள் பணி செய்து இறையடி சேர்ந்தார்.

19. கலிய நாயனார்
திருவொற்றியூரில் எண்ணெய் வணிகம் செய்யும் வணிககுலத்தில் கலியர் பிறந்தார். மிக்க செல்வம் படைத்தவர். திருவருள் நெறியில் திளைத்தார். பெருமானுக்கு விளக்கு ஏற்றி தொண்டு புரிந்து வந்தார். அவர் வறுமையிலும் தொண்டு செய்யும் செம்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட அவர் செல்வம் மறைந்தது. கலியருடைய அசையும் அசையா சொத்துக்கள் அவரை விட்டு நீங்கின.

கலியர் தங்கள் உறவினர்களிடம் எண்ணெய் வாங்கி விற்று அதில் கிடைக்கும் பணத்தில் விளக்கேற்றி வந்தார். காலப்போக்கில் அவர்கள் எண்ணெய் தரமறுத்ததால் அந்த வருவாய் நின்றது. மனம் தளர்ந்தார். எண்ணெய் ஆட்டியும், செக்கு மாட்டை ஓட்டியும் வரும் கூலியைப் பெற்று தொண்டினைத் தொடர்ந்தார். தொழிலில் போட்டி ஏற்பட்டதால் தொழிலும் கிடைக்கவில்லை. வீட்டுப் பொருள்களை எல்லாம் விற்று விளக்கெரித்தார். அதுவும் தீர்ந்தது.

தன் மனைவியை பெற்று பணம் தருவோரைத்தேடினார், ஒருவரும் கிடைக்கவில்லை. படம்பக்க நாதர் கோவில் வந்தார். விளக்கிட ஒரு சாதனமும் இல்லை. விளக்கிடும் தொண்டு இல்லையெனில் நானும் இல்லை என்று அகல் விளக்குகளை வரிசையாக வைத்தார். தம் வாளை எடுத்து எண்ணெய்க்குப் பதில் தன் இரத்தத்தை நிரப்ப எண்ணி கண்டத்தை அறுத்தார்.

சிவபெருமான் தோன்றி கையைப்பிடித்து அருள் தந்தார். விடைமீது காட்சி கொடுத்தார். அவருடன் சிவபதம் அடைந்தார்.

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading