58. முனையடுவார் நாயனார்
நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார்.
அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால் வந்து வேண்டி நின்றால் நடுவு நிலையுடன் பொருள் பெற்று அவர்பால் பகைவரை எதிர்த்து வெற்று பெறுவார். அந்த பொருளைக் கொண்டு அடியார்க்கு உதவிகள் செய்து தொண்டு புரிந்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து சிவதொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
59. மூர்க்க நாயனார்
சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் வேளான்குலத்தில் பிறந்தார் மூர்க்கர். திரு நீற்றை மெய்ப்பொருளாக கருதினார். தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அமுது படைத்தபின்னரே தான் அமுது உன்னும் பழக்கமுடையவர். ஒவ்வொருநாளும் இப்பணி தொடர அடியவர்கள் நிறைய வர தன் உடைமைகளை விற்று தொண்டு செய்தார். மேலும் விற்பதற்கு ஏதுமில்லாததால் முன்பு அவர் அறிந்திருந்த சூதாட்டத்தின் மூலம் வரும் பெருளைக்கொண்டு அமுதுதொண்டு செய்தார். ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று அமுது படைத்தார். ஒவ்வொரு ஊரிலும் சிவனை வழிபட்டு பின் சூதாடி அதனால் வரும் வருவாயை அமுது தொண்டு செய்ய பயன்படுத்தினார்.
குடந்தை நகரம் சென்றார். சூது ஆடி ஈன்ற பொருளில் அடியவர்களுக்கு அமுது ஊட்டி வந்தார். சூதாட்டத்தின் போது இவரை ஏமாற்றினாலோ, தகராறு செய்தாலோ தன்னிடமுள்ளவாளால் குத்திவிடுவதால் மூர்க்கர் என்றனர். சூதாட்டத்தில் வெற்றி பெற்று தனக்கென்று எதையும் இவர் வைக்கவில்லை. மேலும் தான் நல்ல நிலையில் இருக்கும்போது தன் சொத்தை விற்று அமுது படைத்தார். தன் கொள்கை நிறைவேற எடுத்துக் கொண்ட கடைசி வழி. தொண்டுக்கு இடைஞ்சல் என்றால் உயிரைத் தருபவர்கள் அடியார்கள். சூதாடி அதனால் தொண்டு செய்வதால் ஏற்படும் பாவத்தை ஏற்க தயாராக இருந்தார். எல்லோருக்கும் அமுதூட்டி கடைசி ஆளாக மீதம் இருப்பதையே தான் உண்டு தொண்டு செய்து சிவனடி சேர்ந்தார்.