34. சிறுத் தொண்ட நாயனார்
திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் வைத்தியர் மரபிலே பரஞ்சோதியார் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரர். வடமொழி நூல்களையும் மருத்துவ நூல்களையும் கற்று விளங்கினார். யானை எற்றம், குதிரை ஏற்றம், வாட்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிவனை நாளும் வணங்கி வந்தார். அவர் சோழநாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் போர்த்தளபதியாய் இருந்தார்.
இரண்டாம் புலிகேசியை வாதாபியில் வென்று அங்கிருந்து பொன்னும் மணியும், யானைகளையும் குதிரைகளையும் கொணர்ந்தார். நரசிங்கவர்மனின் அன்பிற்கு உகந்தவரானார். அவர் வீரர் மட்டுமல்லாமல் சிறந்த சிவபக்தராகவும் இருப்பதால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று அனைவரும் கூறியதைக் கேட்ட மன்னன் அவருடைய பெருமை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. சிவனடியாரை போர்முனைக்கு அனுப்பினேனே என வருத்தமுற்று இனி நீங்கள் என்னிடம் பணி செய்யலாகாது. நிறைந்த நிலங்களையும் நிதிகளையும் பொன்னும் நவமணியும் கொடுத்து தங்கள் ஊர் சென்று விரும்பிய வண்ணம் தொண்டு செய்யுங்கள் என அனுப்பினார். பரஞ்சோதியார் திருச்செங்காட்டாங்குடி வந்தார்.
வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டை தன் வெற்றிச்சின்னமாக விநாயகரைப் தமிழகத்திற்கு கொண்டுவந்து கணபதி ஈச்சுவரம் என்று தலம் நிறுவி விநாயகரை நிறுவினார். திருவெண்காட்டு நங்கை எனும் பெண்ணை மணம் புரிந்தார். அடியவர்களை அழைத்துவந்து அவருக்கு திருஅமுது அழித்து பின்னேதான் உண்ணும் பழக்கம் மேற்கொண்டார்.
அவர்க்கு சீராளன் என்றமகன் பிறந்தான். ஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர் வீட்டில் சிலநாள் தங்கியிருந்தார். சிறுதொண்டருடைய அன்பை நுகர்வதற்கு சிவன் பைரவர் கோலத்தில் வந்தார். அன்று அடியார் யாரும் இல்லத்திற்கு வராததால் சிருத்தொண்டர் அடியாரைத்தேடி வெளியில் சென்றார். அப்போது பைரவர் அவர் வீட்டிற்கு வந்தார். அவரது துணைவியார் என்ன சொல்லியும் கேளாமல் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். நான் வடநாட்டிலிருந்து அவர்பெயர் கேட்டு வந்தேன். கணபதி ஈச்சுவரத்தில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருகின்றோம். அவர் வந்தால் கூறுவீர் என்றார்.
அடியவர் யாரும் காணமல் வீடு வந்த சிறுத்தொண்டர் விபரம் அறிந்து கணபதி ஈச்சுவரம் அடைந்து பைரவர் காலில் வீழ்ந்து வணங்கினார். வீட்டில் அமுது உண்ண அழைத்தார். பைரவர் எனக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தான் பசு உண்ணுவது. அந்த நாள் இன்றுதான். நான் உண்ணும் பசு ஐந்து வயதிற்கு உட்பட்ட மனிதப்பசு என்றார். அதுவும் ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாய் இருக்க வேண்டும். தாய் பிடிக்க தந்தை அறிய வேண்டும். இருவரும் மனம் உவந்த கறியைத்தான் நாம் உன்பது என்றார். அடியார் அமுது உண்ண இசைந்தாரே என்ற மகிழ்வில் எதுவும் அரியது இல்லை என்றார்.
இல்லம் வந்தார். பைரவர் என்ன சொன்னார் எனக்கேட்டார் துனைவியார். அனைத்தும் சொல்லி சிறுதொண்டர் தம் மகனை அழைத்தார். அணிகலன் அணிவித்து முத்தம் இடப்போனாள் துனைவி. தடுத்தார் தொண்டர். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராள தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்றார். தாதியர் கறியைப் பலவேறாக சமைத்தனர். பைரவரிடம் சென்று அவர் விருப்பப்படியே பசு தாயாரக இருக்கின்றது என்றார்.
பைரவரை ஆசனத்தில் இருத்தி மலர் சார்த்தி பாதப்பூசை செய்தார். பின் அமுது உண்ண அழைத்தார். பைரவர் சிறுதொண்டரே நான் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் சுவையாக கறிசமைத்தீரா என்று கேட்டார். நங்கையார் தலக்கறி அமுதுக்காகாது என கழித்தோம் என்றார். பைரவர் அதுவும் நாம் உண்பேம் என்றார். சிறுத்தொண்டரும் மனைவியாரும் சிந்தை கலங்கி திகைத்து அயர்ந்தனர்.
தாதியர் அதையும் தாம் சமைத்தோம் என கொண்டு வந்தார். அப்போது தனியாக சாப்பிடமுடியாது யாரேனும் அடியார் இருந்தால் கூப்பிடுங்கள் என்றார். அடியார் கிடைக்காமல் வருத்தப்பட்டவருக்கு இன்று என்னதான் சோதனையோ. நானும் ஓர் அடியார் எனக்கூற, சரி அப்படியானல் இவருக்கும் ஓர் இலைபோடச் சொன்னார். வந்த பைரவர் இன்னும் ஏதாவது ஒன்றைச் சொல்லிவிடக்கூடாதே என்ற எண்ணத்தால் சிறுத்தொண்டர் விரைவாக சாப்பிட உட்கார்ந்தார். சிறுத்தொண்டரே ஆறு மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடும் எனக்கு முன் நீர் உன்பது முறையோ என்றார். நாம் தனியாக எப்படி உண்பது. முன்பு நான் பார்த்த உம் மைந்தனை அழையுங்கள் உடன் வைத்து உண்ணலாம் என்றார்.
சிறுதொண்டர் மிகவும் தளர்ந்தார். பிள்ளையைத்தான் கறி சமைத்தேன் என்றால் அடியவர் அமுது செய்வாரோ மாட்டாரோ புரியவில்லை. ஏதாவது பொய் சொல்லவும் மனமில்லை. எனவே அவன் இப்போது உதவான் என்றார். பைரவர் தாம் இங்கு உணவு உண்பது அவன் வந்தால்தான் போய்க்கூப்பிடும் என்றார். கணவன் மனைவி இருவரும் வாயிற்புறத்தே சென்று என் செய்வது என்று புரியாமல் மகனே சீராளா வருவாய் என்று அழைத்தனர். அடியவர் அமுது உண்ண அழைகின்றோம் வா என்றனர்.
எம்பெருமான் அருளாளே பள்ளியிலிருந்து ஓடிவருபவன்போல் வந்த சீராளதேவரை தூக்கி கணவரிடம் கொடுத்தார். மகனைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவர் பைரவரைக் காணாமல் திகைத்தார். கலத்தில் இருந்த கறியமுதம் ஒன்றுமில்லை. அப்போது விடைமீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிகொடுத்தார்.