அப்துல் பாபா பல ஆண்டுகள் சாய்பாபாவுக்கு சேவை செய்து வந்துள்ளார். இளம் வயதிலே ஷிர்டி வந்துள்ளார். வறுமையின் காரணமாக அவரது பெற்றோர், முஸ்லிம் புனிதர் ஒருவரிடம் பணியாற்ற அவரை அனுப்பி வைத்தனர். ஷீரடி பாபாவின் வேண்டுகோளுக்கிணங்க, அவரை ஷீரடிக்கு அனுப்பி வைத்துள்ளார் மகான். பாபாவின் அறைக்குள் நுழைந்ததுமே அவரை உற்சாகத்தோடு வரவேற்று, காகம் வந்துவிட்டது என்றார்.
அப்துல் பாபா நேர்மையான பணியாளராக இருந்து, மசூதியை சுத்தம் செய்து, பாபாவின் உடைகளைக் கழுவி, தண்ணீர் சேகரித்து, விளக்குகளை எரியச் செய்வார். சிறிதளவு உணவை மட்டும் உண்பார், இரவில் சில மணி நேரங்கள் மட்டுமே உறங்குவது வழக்கம். ஒரு புனித பெண்ணை திருமணம் செய்து, ஒரு மகனை பெற்றிருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் சாய்பாபாவின் நேர்மையான பக்தர்கள். உணவுக்காக பிச்சை எடுப்பதும், பாபாவிற்கு உணவு வழங்கலும் வழக்கம். அவர் மிகச் சிறந்த, மென்மையான மனிதர். அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்தவில்லை. அவர், சாய்நாத் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒரு பக்தி வாழ்க்கையை வாழ்ந்தார்.
பாபாவின் அறிவுரையின்படி, அதிகாலையில் விழித்தெழுவார், தனது அன்றாடச் செயல்களை கவனத்துடன் செய்வார். பாபா அவர் மீது மிகுந்த கவனம் செலுத்தி, அவரது அர்ப்பணிப்பான சேவைக்காக அவரைப் பாராட்டியுள்ளார். பள்ளிவாசல்களில் குர்ஆனைப் படிப்பதும், அதை பாபாவிடம் வாசிப்பதும் வழக்கம்.
பாபாவின் அருள் மூலம், புனித உதியை மக்களுக்கு அளித்து, அவர்களின் பாவங்கள், பிரச்னைகள், நோய்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு நிம்மதி பெற செய்தார். அவர் ஒரு நோட்டு புத்தகம் ஒன்றில் சாய்பாபாவின் செய்கைகள் பற்றி எழுதி பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தினார். அந்த நோட்டு புத்தகம் மூலம், ஏராளமான தகவல்கள் திரட்டப்பட்டு, சாய் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் புதுப்பிக்கப்பட்டது. பாபா மஹாசமாதி அடைந்த பின் கூட, அவர் தனது கடமைகளை உரிய முறையில் செய்து வந்துள்ளார். அப்துல் காலமான 1954 ஆம் ஆண்டில் இருந்து அவரது வாரிசுகள் சாய்பாபாவிற்கு சேவை செய்து வருகிறார்கள். புனித பெரியவரை வணங்கி ஆசி பெறுவோம்.
“ஓம் ஸ்ரீ அப்துல் பாபா நமஹா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்