பிரபு ஜகத்பந்து ஒரு பெரிய மகான். 1871 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த கிருஷ்ணரின் தீவிர பக்தர். கிருஷ்ணர், சைதன்ய மகாபிரபு மீது இனிமையான பாடல்களை பாடினார்.
ஜகத்பந்து ஒரு வைஷ்ணவ தத்துவ ஞானி. அவர் தனது பெரும்பாலான நேரத்தை தியானம் செய்வார். பகவத்கீதை, பாகவதம் மற்றும் பிற புனித நூல்களை படித்த அவர், வங்காளதேசத்தில் உள்ள ஃபரிதாப்பூரில், உள்ள அவரது ஸ்ரீ ஆங்கன் ஆசிரமத்தில் வசித்தார்.
தொடர்ந்து பிரார்த்தனை செய்தல், பூஜைகள் செய்தல், தியானம் செய்தல் ஆகியவற்றின் மூலம் கடவுளின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும் என வலியுறுத்தினார். தவறான செயல்களை தவிர்க்கும் பொருட்டு தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தி, கிருஷ்ணரை வேண்டி, தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துமாறு தன் சீடர்களை வலியுறுத்தினார். அவர் தனது நற்பண்புகள் மூலம் தெய்வீக சக்திகளை பெற்று, துறவிகளுக்குள்ளே புனிதராக, பக்திமானாக கருதப்பட்டார். பல புண்ணிய ஸ்தலங்களையும் பார்வையிட்டு, கிருஷ்ணரை வழிபட்டு, மக்கள் மத்தியில் பக்தி உணர்வை பரப்பவும், மன உளைச்சல் இல்லா வாழ்வை வாழவும், இந்தியா முழுவதும் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு முறை கிருஷ்ணர், சைதன்ய தரிசனம் பெற்று, அவர்களிடமிருந்து ஆசி பெற்றார்.
அவரது எளிமையான அணுகுமுறை காரணமாக மன்னர்களும், பொதுமக்களும் அவரை பாராட்டினர். அவரது செய்திகளை மக்களிடையே பரப்பிய ஏராளமான சீடர்களை அவர் பெற்றார். அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். இறைவனின் நித்திய பேரின்பத்தை அடைவதற்காக, பகவான் கிருஷ்ணரின் புண்ணிய திருநாமங்களையும் அடிக்கடி சொல்லச் சொல்லி வற்புறுத்தினார். தன் சக்தியினால், மக்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு அமைதி, மகிழ்ச்சி, மற்றும் எல்லாவிதமான வளமும் பெற்று, வாழ்வில் வளம் பெற செய்தார்.
பரிசுத்த மகானை வணங்குவோம், ஆசீர்வதிக்கட்டும்.
“ஓம் ஸ்ரீ ஜக த்பந்து ப்ரபுவே நமஹா”
“ஜெய் கிருஷ்ணா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்