காந்தாரி

மகாபாரதத்தில் காந்தாரி முக்கிய பங்கு வகிக்கிறாள். அவள் காந்தாரத்தின் இளவரசி, ஹஸ்தினபுரமன்னனின் மனைவி, கவுரவர்களின் தாய். அவள் கற்பு, தூய்மை, புனிதம் ஆகியவை கொண்டிருந்தவள். மேலும், சொர்க்கத்திலும் பூமியிலும் மற்றும் மூன்று உலகங்களிலும் சிறந்த கற்புக்கரசி.

அவள் மற்றவர்களுக்காக ஒரு உதாரணமாகச் செயல்படுகிறாள். இந்த நவீன கால வாழ்க்கையில், அவர் செய்த ஒரு மாபெரும் தியாகத்தைக் கற்பனை கூடச் செய்ய முடியாது. மன்னன் திரிதராஷ்ட்ரரை திருமணம் செய்து கொண்ட பிறகு, அவள் ஒரு பார்வையற்ற பெண்ணாக இருந்தாள். அவள் தன் கண்ணைத் துணியால் கட்டிக் கொண்டு வாழ்ந்துள்ளாள். காந்தாரி பெண்கள் மத்தியில் மாணிக்கமாக கருதப்படுகிறார்.

மேலும், தன் கணவனிடம் தகுந்த நீதி ஆலோசனைகளையும் வழங்கினார். மகாபாரதப் போரின் போது அவள் தனது நூறு புதல்வர்களையும் இழந்திருந்தாள். ஒரு குறுகிய காலத்திற்குள் குலம் அழிந்து விடும் என்று கிருஷ்ணரை சபித்தாள். அவளது முதிய வயதில், காட்டிற்குள் சென்று, பழங்கள், காய்கறிகளை மட்டும் உண்டு ஒரு ஆசிரமத்தில் கணவனுடன் தங்கினாள். அவள் இறந்த பிறகு, தன் கணவர் திரிதராஷ்ட்ரருடன் சேர்ந்து இந்திரனின் தெய்வீக வீட்டை அடைந்தார்.
புண்ணிய தாயை வணங்குவோம், அருள் பெறுவோம்.

“ஓம் ஸ்ரீ காந்தாரி தாயே நமஹா”
“ஜெய் கிருஷ்ணா”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading