அழகம்மாள்

அழகம்மாள் (1864–1922) என்பவர் ஸ்ரீ ரமண மகரிஷியின் புனித அன்னை ஆவார். அவள் திருச்சுழியில் வசித்துவந்தாள். அவளுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. அவர்களில் ஒருவர், சிவனது தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ரமணர்.

ரமணர் தனது இளம் வயதிலேயே ஆன்மீகத்தை நாடி தனது வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தஞ்சம் புகுந்தார். சிறிது காலம் கழித்து அவரது தாயார் அழகம்மாள் ஆகியோரும் அவருடன் தங்கி, அவருக்கு உரிய முறையில் சேவை செய்தார். வறுமை நிலையில் வாழ்ந்து வந்த அவள், தனது மகனுடன் சேர்ந்து அருணாச்சல மலை குகைகளில் தங்கினாள்.

அவள் தெய்வீக மகனின் நன்மைக்காக எல்லாவிதமான கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டாள். சரியான போர்வையின்றி தரையில் படுத்து உறங்குவது வழக்கம். ஸ்ரீ ரமண பக்தர்களால் வழங்கப்படும் எளிய உணவை மட்டும் எடுத்துக் கொண்டாள், மற்றும் வருகை தந்த விருந்தினர்களுக்கு உணவு வழங்கினார். தனது மகன் ரமணர் அருளால் ஆன்மீக ஞானம் பெற்று, 1922 ஆண்டில் முக்தி அடைந்திருக்கிறாள். அவருடைய இளைய மகனும் அவளுடன் சேர்ந்து வாழ்ந்து, அவரும் ஒரு மகான் ஆகி முக்தி அடைந்தார். ரமணாஸ்ரமத்தில் ஒரு சமாதி கோயில் கட்டப்பட்டது. இப்போதும் ஏராளமான பக்தர்கள் புனித அன்னையின் சன்னதியை வணங்கி தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறுகின்றனர்.

புண்ணிய தாயை வணங்கி அருள் புரிவோம்.

“ஓம் ஸ்ரீ அழகம்மாள் தாயே நமஹ ”
“ஜெய் குரு ரமணா”
“ஓம் நமசிவாய நமஹ”
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading