ஸ்ரீ மஹா பக்த விஜயம் 1.ஸ்ரீ ஜயதேவ ஸ்வாமிகள் ஜகந்நாத க்ஷேத்ரம். இங்கே இறைவன் பலதேவனுடனும் தங்கை சுபத்திரையுடனும் காட்சி தருகிறான். எப்பொழுதும் பக்தர்களால் சூழப்பட்டிருக்கும் இத்திருத்தலத்திலே வேத கோஷமும் மெய்யன்பர்கள் நெக்குருகிக் கண் பனி சோர இறைவனைப் பாமாலைகளால் வழிபடும் ஒலியும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய பெருமை வாய்ந்த தலத்தின் அருகே ‘பில்வகாம்’ என்ற அழகிய சிற்றூர் ஒன்றுண்டு. இதைத் திந்து பில்வம் என்றும் சொல்வதுண்டு. இந்த சிற்றூரிலே ஓழுக்கத்தில் சிறந்தவரும் இறைவனது திருவடிகளிலே எப்பொழுதும் […]